உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  சீனா சோதனை ரயில் மோதி 11 ஊழியர்கள் பரிதாப பலி

 சீனா சோதனை ரயில் மோதி 11 ஊழியர்கள் பரிதாப பலி

பீஜிங்:: சீனாவில் சோதனை ரயில் மோதியதில் தண்டவாளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 11 ஊழியர்கள் பரிதாபமாக பலியாகினர். நம் அண்டை நாடான சீனாவின், யுனான் மாகாணத்தின் குன்மிங் நகரில் உள்ள லுயோயாங் ரயில்வே ஸ்டேஷன் வழியாக நில அதிர்வு உபகரணங்களை பரிசோதிக்கும் ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிய வளைவான பகுதியில் திரும்பியபோது, எதிர்பாராதவிதமாக அங்கு தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது சோதனை ரயில் மோதியது. இதில், அங்கிருந்த தொழிலாளர்கள் 11 பேர் உடல் நசுங்கி பலியாகினர். படுகாயமடைந்த தொழிலாளர்கள் இருவருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அந்நாட்டு ரயில்வே துறை, ரயில் சோதனை குறித்து முன்கூட்டியே எச்சரிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே அமைப்பைக் கொண்ட சீனாவில், அடிக்கடி ரயில் விபத்துகள் ஏற்படுவது பயணியர் மற்றும் அதிகாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ