உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரதமர் ஆனால் இந்தியா மீது அணுகுண்டு வீசுவேன்: பிரிட்டன் யூடியூபரின் திமிர் பேச்சு: வலைதளங்களில் வச்சு செய்யும் நெட்டிசன்கள்

பிரதமர் ஆனால் இந்தியா மீது அணுகுண்டு வீசுவேன்: பிரிட்டன் யூடியூபரின் திமிர் பேச்சு: வலைதளங்களில் வச்சு செய்யும் நெட்டிசன்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: பிரிட்டனைச் சேர்ந்த மைல்ஸ் ரூட்லெட்ஜ் என்ற யூடியூபர் , '' நான் பிரிட்டன் பிரதமர் ஆனால் இந்தியா மீது அணுகுண்டு வீசுவேன்'', எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.இவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: நான் பிரிட்டனின் பிரதமர் ஆக வரும்போது, பிரிட்டன் நலன்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு வெளிநாட்டு சக்திக்கும் எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவேன் . சிறிய பிரச்னை என்றாலும், வெளிநாட்டினர் மீது அணுகுண்டை பயன்படுத்த தயங்க மாட்டேன். எனக்கூறியுள்ளார்.மற்றொரு பதிவில், பிரிட்டன் பிரதமர் ஆகும் போது, நாட்டின் நலன் கருதி இந்தியா மீதும் அணுகுண்டு வீசுவேன் எனுக்கூறினார். பிறகு இதனை அவர் அழித்து விட்டார். இருப்பினும், சில நெட்டிசன்கள் இதனை ' ஸ்க்ரீன்ஷாட் ' எடுத்து பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக இந்திய நெட்டிசன்கள் அவருக்கு சராமரியாக பதிலடி கொடுக்க துவங்கியதும் ரூட்லெட்ஜ், நம்புகிறீர்களோ இல்லையோ எனக்கு இந்தியாவை பிடிக்காது. ஒருவர் இந்தியன் என்றால், அவரை உணர முடியும் என்றார். மேலும் இந்தியர்கள் தன்னை மிரட்டுவதாகவும் கூறுகிறார். அந்த நபரை ஜாதி ரீதியில் விமர்சனம் செய்ததுடன், நிறவெறியை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டு உள்ளார்.இந்தியா குறித்த கருத்தை பதிவிட்டது முதல், இனவெறியை தூண்டும் 'மீம்'களையும், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் பதிவிட்டு வருகிறார்.

யார் இவர்

மைல்ஸ் ரூட்லெட்ஜ் , 2021ம் ஆண்டு ஆப்கன் சென்றார். தலிபான்கள் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்கள் எப்படி வாழ்கின்றனர் என்பதை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதற்காக பிரிட்டன் அரசின் எச்சரிக்கையையும் மீறி சென்றார். ஆனால், அவர் சென்ற ஓரிரு நாட்களில் ஆப்கன், தலிபான்களின் பிடியில் வந்தது. இதனையடுத்து அவர் பாதுகாப்பான இடத்தில் அடைக்கலம் புகுந்தார். பிரிட்டன் ராணுவம் வந்து தான் இவரை மீட்டு வந்தது. அது முதல் இவர் பலரின் கவனத்திற்கு உள்ளானார். கஜகஸ்தான், உகாண்டா , கென்யா, தெற்கு சூடான் , உக்ரைன் மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் ஆபத்தான இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு, சிறைவாசம் மற்றும் சட்டவிரோதமாக எல்லையை கடந்து செல்லுதல் போன்ற சவால்களுக்கும் உள்ளானார். இதனால் இவர், ' ஆபத்தான சுற்றுலா பயணி' என முத்திரை குத்தப்பட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

தியானேஷ்வரன்
ஆக 26, 2024 16:53

தம்பி உங்க தம்பியை காக்கைக்கு போட்டுருவோம் இங்கே நடக்காது நி அப்படி நினைக்கும் போது உன் நாடு இருக்காது


Eswara Moorthi
ஆக 25, 2024 23:12

???????????


Mohan
ஆக 24, 2024 19:07

ஐயோ பாவம். இவரை மாதிரி இன்னொரூ கும்பல், நாஜி ஜெர்மனியின் ""ஹிட்லரை"" ஹீரோவாக வைத்துக்கொண்டு அலம்பல் பண்ணுவானுவோ. இவர்களை ""இக்னோர்"" செய்வதே உத்தமம்


nakkeerapuram Samy
ஆக 24, 2024 17:29

சபாஷ் சரியான பதில் உள்ளூற தேசபக்தி வாழ்த்துக்கள் நண்பா???


TSRSethu
ஆக 24, 2024 14:35

மூளைச்சலவை செய்யப்பட்டவனுக்கு இந்தியாவை எப்படி பிடிக்கும் ?இவனை முதலில் இங்கிலாந்தை அகதிகளிடம் இருந்தும் புலம் பெயர்ந்தோருடமிருந்தும் முடிந்தால் காப்பாற்றச்சொல்லுங்கள்


Bahurudeen Ali Ahamed
ஆக 24, 2024 12:42

புத்திசாலித்தனமான கருத்துகளையா எதிர்பார்க்க முடியும், இப்படித்தான் பிதற்றும்


Rajesh
ஆக 24, 2024 12:31

இந்த முட்டாளை மனநோயாளியாக கருதி இவனை வாழ்நாள் வீட்டுச் சிறையில் வைக்க உத்தரவிடுவேன் நான் இந்திய பிரதமர் ஆனால் இந்தியாவை வளர்ச்சி அடைந்த வல்லரசு நாடாக உருவாக்க அனைத்து கிராமங்களுக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு வருடத்திற்கு 300 நாட்கள் ஒரு நாளைக்கு 400 ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பு அளித்து இலவச கல்வி அளித்து இந்த நாட்டை வறுமையில்லாத நாடாக மாற்றுவேன் இந்தியாவை வளர்ச்சி அடைந்த வல்லரசு நாடாக மாற்றுவேன்


Ashanmugam
ஆக 24, 2024 12:03

how dare are you to throwing Atom bomb against the Indian democratic soverign country in the event of becoming Britain President? India is not a cowardice country to bow down to foreign aggression but to confront with those countries which triggers bomb wittingly with befitting retreat of military force to thwart the war situation to save the people of whole India. Since independence, India had never voluntarily fought against any countries for capturing territories for its own sake rather to maintaining peace, tranquility and mutual understanding of each countries solidarity cooperation for national growth.


Ashanmugam
ஆக 24, 2024 11:49

அடேய்? நீ பிரிட்டன் பிரதமராக வந்தாலும் இந்தியா மீது அணுகுண்டு வீசும் அளவிற்கு இந்தியா கோழை நாடு இல்லை என்பதை தெரிந்து கொள்ளடா முட்டாள்? இந்தியா அந்நிய தேச உறவு முறையில் எப்போதும் நட்புறவு, சமாதானம், பரஸ்பர ஒற்றுமை உறவை மேற்கொண்டு வருகிறது. இந்தியா பொறுத்தவரை மற்ற நாடுகளை போல் ஆக்கிரமித்துக்கொள்ள போர்தொடுப்பதில்லை, விரும்புவதில்லை. மேலும், அந்நிய நாட்டு அப்பாவி மக்களை கொல்லவும், ஊரை நாசம் செய்யவும் ஒருகாலும் நினைப்பதில்லை? மாறாக எந்த நாடாவது வீம்புக்கு இந்தியாவின் ஸ்திர தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் மறைமுகமாக போர் தொடுக்கும் முயற்சியில் ஈடு பட்டால், அந்த நாடு பேரழிவை சந்திப்பதோடு, உலக வரை படத்தில் ஊர் பேரே இருக்காது. ஆக இந்தியா உள்நாட்டில் அரசியல் பிளவு ஏற்பட்டாலும், போர் என்று வந்து விட்டால் இந்தியா வேடிக்கை பார்க்காது. அதிரடியாக எதிர்நோக்கி இந்திய மக்களை காப்பாற்றும் என்பதை வெளிநாட்டவர்கள் உணர வேண்டும்? உதாரணம், அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், தலிபான்கள், தீவிரவாதிகள் ஆகியோர் எல்லோரும் ஏற்கனவே மறைமுக போர் தொடுத்து முடிவில் தோல்வி அடைந்தனர் என்பதை உணர வேண்டும்.


SRIRAM
ஆக 24, 2024 10:14

இவர் வாழும் நாடு முஸ்லிம் நாடாக மாறி வருகிறது .அதை முதலில் காப்பாத்துங்க ....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை