மொபைல் போனால் ஒவ்வாமை!
ராதா மாதவன், ஸ்ரீவில்லிபுத்தூர்: மொபைல் போன் உபயோகிப்பது கூட, சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுவதாகக் கூறப்படுகிறதே... உண்மையா?ஆம். மின்சாதனப் பொருட்கள், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். மின்சாதனப் பொருட்களில் உள்ள மின் காந்த அலைகளால், இந்த பாதிப்பு ஏற்படும். அத்தகையோருக்கு, மொபைல் போன், மைக்ரோவேவ் உட்பட, பல சாதனங்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.