உள்ளூர் செய்திகள்

தடுப்பூசியில் தவறு நடக்குமா?

அனைத்து தடுப்பூசிகளும் 2-8 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் பாதுகாக்கபபட்டு, தலா 0.5 மில்லி என்ற அளவில், இரண்டு தவணைகளிலும் போட வேண்டும்.தவறான வெப்பநிலையில் வைத்தால், அவற்றின் செயல்திறன் குறைந்து விடும். செயல்திறன் குறைந்த தடுப்பூசியை போட்டு விட்டால், தடுப்பூசி செலுத்திக் கொண்டவரை, மருத்துவரின் கண்காணிப்பில் வைத்து, எதிர்மறை விளைவுகள் ஏற்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும்.இது தவிர, ஐ.வி.எப்., வழியாக தடுப்பூசியை செலுத்தாமல் வேறு ஏதேனும் பாதையில் தவறுதலாக செலுத்திவிடுவது, சரியான அளவு மருந்தை செலுத்தாமல் விடுவது, இரண்டாவது 'டோஸ்' தடுப்பூசி போடும் போது, முதல் முறை போட்ட தடுப்பூசியைப் போடாமல், வேறு வகைத் தடுப்பூசியை போட்டு விடுவது ஆகியவற்றுக்கான வாய்ப்புகள் உண்டு.இது போன்ற தவறுகள் நடந்தால், இன்னொரு முறை தடுப்பூசி போடுவதைத் தவிர்த்து, சில மணி நேரம் மருத்துவரின் கண்காணிப்பில் வைக்க வேண்டும். டாக்டர் ஜெயஸ்ரீ மகாலிங்கம்,தலைவர், கிளினிக்கல் ரிசர்ச் பார் ஹெல்த் கேர் எஜுகேஷன், ஐதராபாத்mjayashri@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்