பலே பாண்ட்யா
இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் நடந்தது. இது, ஒரு நாள் அரங்கில் இந்திய அணி பங்கேற்ற 900ஆவது போட்டி. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி, அறிமுக வீரர் பாண்ட்யா வேகத்தில் பணிந்தது. இவர், 3 விக்கெட் வீழ்த்த, 43.5 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின் எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கோஹ்லி அரை சதம் (85*) கடந்து கைகொடுத்தார். 33.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.