உள்ளூர் செய்திகள்

மனக்குழப்பம் தீர...

திருநாவுக்கரசர் பாடிய திங்களூர் பதிகத்தை பாடினால் மனக்குழப்பம் தீரும். ஒன்று கொல் ஆம் அவர் சிந்தை உயர் வரை;ஒன்று கொல் ஆம் உயரும் மதி சூடுவர்;ஒன்று கொல் ஆம் இடு வெண் தலை கையது;ஒன்று கொல் ஆம் அவர் ஊர்வதுதானே.இரண்டு கொல் ஆம் இமையோர் தொழு பாதம்;இரண்டு கொல் ஆம் இலங்கும் குழை; பெண், ஆண்,இரண்டு கொல் ஆம் உருவம்; சிறு மான், மழு,இரண்டு கொல் ஆம் அவர் ஏந்தின தாமே.மூன்று கொல் ஆம் அவர் கண் நுதல் ஆவன;மூன்று கொல் ஆம் அவர் சூலத்தின் மொய் இலை;மூன்று கொல் ஆம் கணை, கையது வில், நாண்;மூன்று கொல் ஆம் புரம் எய்தன தாமே.நாலு கொல் ஆம் அவர்தம் முகம் ஆவன;நாலு கொல் ஆம் சனனம் முதல் தோற்றமும்;நாலு கொல் ஆம் அவர் ஊர்தியின் பாதங்கள்நாலு கொல் ஆம் மறை பாடினதாமே.அஞ்சு கொல் ஆம் அவர் ஆடு அரவின் படம்;அஞ்சு கொல் ஆம் அவர் வெல் புலன் ஆவன;அஞ்சு கொல் ஆம் அவர் காயப்பட்டான் கணை;அஞ்சு கொல் ஆம் அவர் ஆடின தாமே.ஆறு கொல் ஆம் அவர் அங்கம் படைத்தன;ஆறு கொல் ஆம் அவர் தம் மகனார் முகம்;ஆறு கொல் ஆம் அவர் தார்மிசை வண்டின் கால்;ஆறு கொல் ஆம் சுவை ஆக்கினதாமே.ஏழு கொல் ஆம் அவர் ஊழி படைத்தன;ஏழு கொல் ஆம் அவர் கண்ட இருங் கடல்;ஏழு கொல் ஆம் அவர் ஆளும் உலகங்கள்ஏழு கொல் ஆம் இசை ஆக்கினதாமே.எட்டுக் கொல் ஆம் அவர் ஈறு இல் பெருங் குணம்;எட்டுக் கொல் ஆம் அவர் சூடும் இன மலர்;எட்டுக் கொல் ஆம் அவர் தோள் இணை ஆவன;எட்டுக் கொல் ஆம் திசை ஆக்கினதாமே.ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன;ஒன்பது போல் அவர் மார்பினில் நுால் இழை;ஒன்பது போல் அவர் கோலக் குழல் சடை;ஒன்பது போல் அவர் பார் இடம்தானே.பத்துக் கொல் ஆம் அவர் பாம்பின் கண், பாம்பின் பல்;பத்துக் கொல் ஆம் எயிறு(ந்) நெரிந்து உக்கன;பத்துக் கொல் ஆம் அவர் காயப்பட்டான் தலை;பத்துக் கொல் ஆம் அடியார் செய்கை தானே.