உள்ளூர் செய்திகள்

சபரிமலை செல்பவரா...

ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை வருடம் தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. அவர்களுக்கான டிப்ஸ் கீழே... * மாலை அணிவதற்கு முன் பெற்றோரின் ஆசி, மனைவியின் சம்மதம் தேவை. * கார்த்திகை, மார்கழி மாதப்பிறப்பு அன்று மாலை அணியுங்கள். அதற்கு நாள், நட்சத்திரம், பார்க்கத் தேவை இல்லை.* கார்த்திகை முதல் தேதியில் மாலை அணியாவிட்டால் அந்த மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம், புதன், சனிக்கிழமைகளில் மாலை அணியலாம்.* கோயில் அர்ச்சகரிடம் மாலையைக் கொடுத்து, பூஜை செய்து குருநாதர் முன்னிலையில் அணிய வேண்டும். 18 ஆண்டுகள் தொடர்ந்து சபரிமலைக்கு செல்பவரே குருநாதர். அவரின் சொல்லைப் பின்பற்றுங்கள். * தினமும் காலை, மாலையில் குளிக்க வேண்டும்.* உடுத்தும் ஆடை நீலம், காவி நிறத்தில் இருக்க வேண்டும். * எண்ணம், சொல், செயல் துாய்மையாக இருக்க வேண்டும். * எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.* முகச் சவரம் செய்து கொள்வதோ, முடி வெட்டுவதோ கூடாது.* வீண் பொழுது போக்குகளில் ஈடுபடக் கூடாது.* வெற்றிலைப் பாக்கு கூடாது.* பகலில் துாங்கக் கூடாது.* மெத்தை, பாயில் படுக்கக் கூடாது.* செருப்பு அணியக் கூடாது.* சிகரெட், மது அருந்துபவரின் அருகில் கூட நிற்கக் கூடாது.* மாமிசம் சாப்பிடக் கூடாது.* காம சிந்தனை கூடாது. * வீட்டிற்கு விலக்கான பெண்களைப் பார்க்கக் கூடாது.* துக்க நிகழ்ச்சி, பூப்புனித நீராட்ட விழாவிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ அவரும், குடும்பத்தாரும் செல்லக் கூடாது.* ஆண் பக்தர்களை 'ஐயப்பா' என்றும், பெண் பக்தர்களை 'மாளிகைபுரத்தாள்' என்றும், சிறுவர்களை 'மணிகண்டா' என்றும் அழைக்க வேண்டும்.* ஒரு பக்தர் மற்றொரு பக்தரை சந்திக்கும் போதும், பேச வேண்டிய அவசியம் வந்தாலும் பேச்சை முடிக்கும் போதும் 'சுவாமியே சரணம்' என சொல்ல வேண்டும். * வீட்டில் இருந்து கிளம்பிய பக்தர்கள், நேரடியாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குத் தான் முதலில் செல்ல வேண்டும். வேறு எங்கும் செல்லக் கூடாது.