உள்ளூர் செய்திகள்

நலமுடன் வாழ...

தினமும் திருநீறு அணிந்து கீழ்க்கண்ட பதிகத்தை பாடினால் நலமுடன் வாழலாம். பாடற் கினிய வாக்களிக்கும்பாலும் சோறும் பரிந்தளிக்கும்கூடற்கினிய அடியவர்தம்கூட்டம் அளிக்கும் குணமளிக்கும்ஆடற்கினிய நெஞ்சே நீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்தேடற்கினிய சீரளிக்கும்சிவாய நம என்றிடு நீறேகருமால் அகற்றும் இறப்பதனைக்களையு நெறியும் காட்டுவிக்கும்பெருமால் அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசை அறுக்கும்அருமால் உழந்த நெஞ்சே நீ அஞ்சேல் என்மேல் ஆணை கண்டாய்திருமால் அயனும் தொழுதேத்தும் சிவாய நம என்றிடு நீறேவெய்ய வினையின் வேரறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டிலடைந்துய்ய அமல நெறிகாட்டும் உன்னற் கரிய உணர்வளிக்கும்ஐயம் அடைந்த நெஞ்சே நீ அஞ்சேல் என்மேல் ஆணை கண்டாய்செய்ய மலர்க்கண் மால் போற்றும் சிவாய நம என்றிடு நீறேகோல மலர்த்தாள் துணைவழுத்தும் குலத்தொண்டு அடையக் கூட்டுவிக்கும்நீல மணிகண்டப் பெருமான் நிலையை அறிவித்தருள் அளிக்கும்ஆல வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என்மேல் ஆணை கண்டாய்சீலம் அளிக்கும் திருவளிக்கும் சிவாய நம என்றிடு நீறேவஞ்சப் புலக்கா டெறியஅருள் வாளும் அளிக்கும் மகிழ்வளிக்கும்கஞ்சத் தவனும் கரியவனும் காணற் கரிய கழலளிக்கும்அஞ்சில் புகுந்த நெஞ்சே நீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்செஞ் சொல் புலவர் புகழ்ந்தேத்தும்சிவாய நம என்றிடு நீறேகண்கொள் மணியை முக்கனியைக் கரும்பைக் கரும்பின் கட்டிதனை விண்கொள் அமுதை நம்அரசை விடைமேல் நமக்கு தோற்றுவிக்கும் அண்கொள் வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்திண் கொள் முனிவர் சுரர் புகழும் சிவாய நம என்றிடு நீறே. நோயை அறுக்கும் பெருமருந்தை நோக்கற் கரிய நுண்மைதனைத் துாய விடைமேல் வரும் நமது சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும்ஆய வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என்மேல் ஆணை கண்டாய்சேய அயன்மால் நாடரிதாம்சிவாய நம என்றிடு நீறேஎண்ண இனிய இன்னமுதை இன்பக் கருணைப் பெருங்கடலைஉண்ண முடியாச் செழுந்தேனை ஒருமால் விடைமேல் காட்டுவிக்கும்அண்ண வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என்மேல் ஆணை கண்டாய்திண்ண மளிக்கும் திறமளிக்கும்சிவாய நம என்றிடு நீறேசிந்தா மணியை நாம் பலநாள்தேடி எடுத்த செல்வமதை இந்தார் வேணி முடிக்கனியை இன்றே விடைமேல் வரச்செயும்காண்அந்தோ வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என்மேல் ஆணை கண்டாய்செந்தாமரையோன் தொழுதேத்தும் சிவாய நம என்றிடு நீறேஉள்ளத் தெழுந்த மகிழ்வை நமக் குற்ற துணையை உள்உறவைக் கொள்ளக் கிடையா மாணிக்கக் கொழுந்தை விடைமேல் கூட்டுவிக்கும் அள்ளல் துயரால் நெஞ்சே நீ அஞ்சேல் என்மேல் ஆணை கண்டாய்தெள்ளக் கடலான் புகந்தேத்தும் சிவாய நம என்றிடு நீறேஉற்ற இடத்தில் உதவ நமக் குடையோர் வைத்த வைப்பதனைக் கற்ற மனத்தில் புகுங்கருணைக் கனியை விடைமேல் காட்டுவிக்கும்அற்றம் அடைந்த நெஞ்சே நீ அஞ்சேல் என்மேல் ஆணை கண்டாய்செற்றம் அகற்றித் திறல் அளிக்கும் சிவாய நம என்றிடு நீறே.