உள்ளூர் செய்திகள்

சிவனை நினை மனமே

* தேவாரம் பாடிய மூவர் சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்.* தேவாரப் பாடல் பெற்ற துளுவ நாட்டு சிவத்தலம் கர்நாடகா திருக்கோகர்ணம்.* மன்னர் அநபாயச் சோழனிடம் அமைச்சராக இருந்தவர் சேக்கிழார்.* சிதம்பரத்திற்கு பெரும்பற்றப்புலியூர் என்றும் பெயருண்டு. * ஆமை சிவபூஜை செய்த தலம் திருமணஞ்சேரி.* ஜோதிர்லிங்கத் தலங்களில் தமிழகத்திலுள்ள ஒரே தலம் ராமேஸ்வரம்.* சிவனின் திருக்கோலங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர் சோமாஸ்கந்தர்.* பஞ்சாட்சர மந்திரத்தை 'திருவைந்தெழுத்து' என்றும் சொல்வர்.