உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

 வி.ஷிவானி, பசவன்குடி, பெங்களூரு.*எதிரி தொல்லை தீர...முருகனின் 300 மந்திரங்கள் ஜபிக்கும் சத்ரு சம்ஹார யாகம் செய்தால் எதிரி தொல்லை தீரும். கு.பரிமளா, வில்லிவாக்கம், சென்னை.*மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் 6வது, 8வது ராசியாக வரக் கூடாதாமே...இது சஷ்டாஷ்டக தோஷம். தம்பதி ஒற்றுமை குறையும். அ.ரக் ஷிகா, கல்யாண்புரி, டில்லி. *துாங்கும் முன் தாலியை கழற்றலாமா...அவரவர் திருமணம் ஆகவில்லை என கஷ்டப்படறாங்க. நீங்க இப்படி கேட்கலாமா...எம்.பிரேமா, ஸ்ரீமுஷ்ணம், கடலுார். *முருகனுக்கு பிடித்த நைவேத்தியம், ராகம், தாளம் எவை?தேன், தினைமாவு, பால்பாயாசம், சண்முகபிரியா ராகம், குக்குட தாளம்.ரா.பூபதி, ராஜபாளையம், விருதுநகர்.*திருவாசகம் எப்போது பாராயணம் செய்யலாம்?காலை, மாலையில் பாராயணம் செய்யலாம். ஆ.சரண்யா, மானுார், திருநெல்வேலி. *நீராடும் போது சொல்ல வேண்டிய மந்திரம் என்ன?கங்காச யமுனா சைவ நர்மதா சரஸ்வதி|ஸிந்து கோதாவரி சைவ ஜலேஸ்மின் ஸன்னிதிம் குருஇந்த ஸ்லோகத்தைச் சொல்லி புனித நதிகளை மனதார நினையுங்கள். சு.திவ்யபாரதி, அன்னுார், கோயம்புத்துார். *கிரக வக்கிரம்(பின்னோக்கி நகர்தல்) என்ன செய்யும்?கிரகம் நிற்கும் ராசியைப் பொறுத்து நன்மை நடப்பதற்கு பதிலாக தீங்கும், தீங்கு நடப்பதற்கு பதிலாக நன்மையும் கிடைக்கும். ரா.கேசவன், நத்தம், திண்டுக்கல்.*தலைவலியால் சிரமப்படுகிறேன்; யாரை வழிபடலாம்?திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமியை மனதில் வழிபட தலைவலி குணமாகும்.எம்.முரளி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி. *பாவத்திற்கு என்ன பரிகாரம்?புனித நதியில் நீராடுதல், கோயில் வழிபாடு, பெரியவர்களிடம் ஆசி பெற்றால் பாவம் குறையும்.