கேளுங்க சொல்கிறோம்
ரா.காமேஸ்வரன், கருநாகப்பள்ளி, கன்னியாகுமரி: வியாபார வளர்ச்சிக்கு...பணிவும், நேர்மையும், அக்கறையும் இருக்க வேண்டும். மேலும் வெள்ளியன்று மகாலட்சுமியை வழிபடுங்கள். இ.மாளவிகா, காடுகோடி, பெங்களூரு: பசு வழிபட்ட சிவத் தலங்கள்....திருவாவடுதுறை (மயிலாடுதுறை), திருக்கோகர்ணம் (புதுக்கோட்டை), பேரூர் (கோவை)எம்.திலக், ஆண்டிப்பட்டி, தேனி: யானை முடி மோதிரம் அணிவது ஏன்?திருஷ்டியில் இருந்து விடுபட இதை அணிகிறோம்.வ.சிதம்பரம், தேவிப்பட்டினம், ராமநாதபுரம்: திருமணத்தை தள்ளிப் போடுகிறார்களே...இளைஞர்களின் எதிர்பார்ப்பு, பொருளாதாரம், கலாசார சீரழிவு போன்றவை இதற்கு காரணம். ம.பன்னீர்செல்வம், தளி, திருப்பூர்: சஷ்டியப்த பூர்த்தி(60) தம்பதியருக்கு கனகாபிஷேகம் செய்யலாமா?செய்யக் கூடாது. 100 வயதில் தான் கனகாபிஷேகம் செய்ய வேண்டும். குரு.யாழினி, மேல்மலையனுார், விழுப்புரம்: விரதம் இருப்பவர்கள் உப்பு சேர்க்கலாமா?உப்பு இல்லாமல் சாப்பிட்டால் முடியாத செயலும் நடக்கும். ரா.ஆதர்ஷினி, பெருமாள்புரம், திருநெல்வேலி: வீடு கட்டுவதில் தடை ஏற்பட்டால்... நன்றுடையானை தீயதிலானை...' எனத் தொடங்கும் சம்பந்தர் பாடிய தேவாரத்தை தினமும் பாடுங்கள். பி.ரகு, வண்டலுார், செங்கல்பட்டு: வழக்கு பிரச்னை தீர பைரவரை வழிபடலாமா...வழிபடலாம். தேய்பிறை அஷ்டமி அன்றும், ஞாயிறு அன்று ராகு காலத்திலும் விளக்கேற்றுங்கள். க.காந்தி, மாடன்டவுன், டில்லி: பூர்வீகச் சொத்து பிரச்னைக்கு...ஞாயிறு அன்று ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுங்கள்.