சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
* தாய், தந்தை, நண்பன், மன்னன், சேவகன், குரு, சீடன் என பலவித வடிவங்களில் கிருஷ்ணரைப் பாடிப் பரவசம் அடைந்தவர் மகாகவி பாரதியார். * பகவத் கீதையை உலகிற்கு உபதேசம் செய்து தானும் அதன்படி வாழ்ந்து காட்டியவர் கிருஷ்ணர். * குருவாயூரப்பன் மீது நாராயணீயம் பாடிய அருளாளர் நாராயண பட்டத்திரி. * மன்னரான அர்ஜூனனுக்கும், ஏழையான குசேலனுக்கும் வாழ்வளித்தவர் கிருஷ்ணர். * குபேரனின் மகன்களான நளகூபன், மணிக்ரீவன் ஆகியோர் மருதமரமாக இருந்து கிருஷ்ணரால் சுய வடிவத்தைப் பெற்றனர். * குழந்தையாக இருக்கும்போதே கம்சனால் ஏவப்பட்ட பூதனை என்னும் அரக்கி, பகாசுரன் என்ற அரக்கனையும் கிருஷ்ணர் கொன்றார். * உழைத்து சாப்பிட வேண்டும் என வலியுறுத்தியவர் அதற்கு முன்னுதாரணமாகவும் திகழ்ந்தார். ஆம். அர்ஜூனனுக்காகத் தேரை ஓட்டி, தினமும் குதிரைகளைக் குளிப்பாட்டி, உணவும் கொடுத்தார்.* கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தை கண்ணனை வரவேற்கும் விதத்தில் மாக்கோலம் இடுவது அவசியம்.