உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* 'வித்' என்றால் அறிவது. இதில் இருந்தே 'வேதம்' என்ற சொல் உருவானது. * குதிரை முகமும், மனித உடலும், சூரிய, சந்திரர்களை இரு கண்களாகவும் கங்கை, சரஸ்வதியை இமைகளாகவும் சங்கு சக்கரம் ஏந்தியபடி கல்விக்கடவுளான ஹயக்ரீவர் அருள்புரிகிறார். * ஒருவர் தம் சக்திக்கு மீறி தானம் அளித்தால் அதை ஏற்கக் கூடாது. * வேத காலத்திலேயே ஜோதிட சாஸ்திரம் பற்றி எழுதப்பட்டுள்ளது. * பூஜை அறை, சமையல் அறை, கழிவறைகளை அடுத்தடுத்து அமைக்கக் கூடாது. * விரதமிருக்கும் நாளில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது. * நிறைவேறாத ஆசைகளுடன் இறந்தால் அதுவே மறுபிறப்பிற்கான காரணமாக அமையும். * பிரசாதம் என்றால் 'அருள்' என பொருள். பிரசாதம் வாங்கினால் தெய்வ அருள் கிடைக்கும். * ஒரு வீட்டின் பிரதான வாசலுக்கு நேர் எதிரே மற்றொரு வீட்டின் பிரதான வாசல் இருப்பது கூடாது. * புண்ணியத்தால் சொர்க்கத்திலும், பாவத்தால் நரகத்திலும், புண்ணியம், பாவம் கலந்து இருந்தால் பூமியிலும் வாழும் வாய்ப்பு கிடைக்கும்.