உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் பைரவரும் ஒருவர். சிவன் கோயிலின் வடகிழக்குப் பகுதியில் இவரின் சன்னதி இருக்கும். * அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீக்ஷண பைரவர், சம்ஹார பைரவர் ஆகியோர் அஷ்ட பைரவர் எனப்படுவர். * கடன், குடும்பப் பிரச்னை, நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுவிடுப்பவராக பைரவர் இருக்கிறார். * பைரவரின் வாகனம் நாய். நாய்களுக்கு உணவு அளித்தால் இவரின் அருள் கிடைக்கும். * பைரவரை வழிபட விசேஷ நாள் ஞாயிறு, ராகு காலம், தேய்பிறை அஷ்டமி திதி. * காலபைரவர் வழிபாடு நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷம், தீமையை குறைக்கும். * பைரவருக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை வீட்டில் தெளித்தால் தீயசக்தி அண்டாது. * தேய்பிறை அஷ்டமியன்று தீபம் ஏற்றி சிவப்பு நிற மலரால் அர்ச்சனை செய்து காரமான புளி சாதத்தை நைவேத்யம் செய்வது சிறப்பு. * பைரவர் சன்னதியில் தொடர்ந்து 48 நாள் தீபம் ஏற்றினால் இழந்த பொருள், சொத்து சம்பந்தமான பிரச்னை தீரும்.