உள்ளூர் செய்திகள்

தொடர்ந்து செய்யுங்க தொய்வில்லாமல் வாழுங்க

கீழ்கண்டவற்றை 21 அமாவாசையில் தொடர்ந்து செய்தால் முன்னோர் ஆசி முழுமையாக கிடைக்கும். நினைத்தது நடக்கும். * விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பாலை குழந்தைகளுக்கு கொடுத்து வர கல்வியில் சிறப்பார்கள். * எறும்புகளுக்கு அரிசி, தானியம் கொடுத்து வர குடும்ப ஒற்றுமை பலப்படும். * காகத்திற்கு உணவிட்டால் தோல் நோய் நீங்கும்.* குரங்குகளுக்கு கடலை, பிஸ்கட், பொரி, பழங்கள் கொடுக்க அலைபாயும் மனம் தெளிவடையும். * முருகன் கோயிலில் செய்யும் அன்னதானம் முன்பகையை முறியடிக்கும்* சித்தர்களின் சன்னதிகளில் சாம்பிராணி இட்டு வர தடைபட்ட செயல் நிறைவேறும். * பசுமாட்டிற்கு கீரை கொடுக்க தீவினை நீங்கும்.* இரவில் சாப்பாட்டிற்கு பிறகு தாம்பூலம் இட்டுக் கொள்பவர்கள் 11 பேருக்கு தாம்பூலம் கொடுக்க குடும்பச்சுமை குறையும்.