நம்பிக்கையும் பொறுமையும் உன்னிடம் உள்ளதா...
* நம்பிக்கையும் பொறுமையும் உள்ளவர்களின் பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறும்.* நல்ல மனம் கொண்ட பக்தர்களின் வீட்டில் பற்றாக்குறை இருக்காது.* மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக் காரணம், அவரவர் செய்த பாவ புண்ணியங்களே.* நல்லதோ கெட்டதோ உனக்குரிய வினைப் பயனை அனுபவித்தே ஆக வேண்டும். * மனிதப்பிறவி மகத்தானது. இதை உணர்ந்துகொண்டு பயனுள்ள பணிகளைச் செய். * துன்பத்தில் வருந்துபவர்களுக்கு உதவி செய். * நெருக்கடி நேரத்திலும் விவேகமாக செயல்படு. * மற்றவர்களது துன்பத்தை பார்த்து மகிழ்ச்சி அடையாதே. அப்படி சந்தோஷப்பட்டால் அதுவும் பாவம் ஆகும். * உண்மை எது என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ப செயல்படு.* யாரிடமும் சண்டையிடாதே. அப்படி செய்தால் மனம் அமைதியாக இருக்கும். * உன்னை விமர்சிக்கும் இடத்தை விட்டு விலகிச் செல். * எதிராளி பத்து வார்த்தை பேசினால் பதிலுக்கு ஒரு வார்த்தை பேசு போதும். * பணம் இல்லாமல் வாழ முடியாது. அதே சமயம் கஞ்சனாக இருக்காதே. * சுவாசிப்பது மட்டுமல்ல பிறருக்கு சேவை செய்வதே வாழ்க்கை. * நீ செய்த வினைகளின் பயனை, யார் நினைத்தாலும் தடுக்க முடியாது.* குறிக்கோள் உடையவர்கள் மங்காத புகழுடன் வாழ்வார்கள். கேட்கிறார் ஷீரடி சாய்பாபா