உள்ளூர் செய்திகள்

விநாயகர் என்றால்...

* 'வி' என்றால் மேலானவர், நாயகன் என்றால் தலைவர். தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாத தெய்வம் 'விநாயகர்' * கண என்பது உயிர்க்கூட்டங்களை குறிக்கும், பதி என்பது தலைவனை குறிக்கும். உயிர்க்கூட்டங்களின் தலைவன் கணபதி ஆவார். * விநாயகரின் முதல் பக்தர் புருசுண்டி முனிவர்.* விநாயகருக்கு முதன் முதலில் கொழுக்கட்டை செய்து வழிபட்டவர் வசிஷ்டரின் மனைவி அருந்ததி. * விநாயகருக்கு முதன் முதலில் தோப்புகரணம் இட்டு வழிபட்டவர் அகஸ்தியர்.* விநாயகருக்கு முதன் முதலில் அகவல் பாடியவர் அவ்வையார். * நவக்கிரகங்களில் கேதுவின் அதிதேவதை விநாயகர்.* விநாயகருக்கு ஒரு கொம்பு, இரண்டு செவி, மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள், ஆறு எழுத்து மந்திரத்தை உடையவர் என எண்ணலங்காரத்தில் வணங்குவார் வாரியார்.* நான்கு யுகத்திலும் விநாயகருக்கு அமைந்த வாகனங்கள். கிருதயுகம் - சிம்மம் திரேதா யுகம் - மயில் துவாபர யுகம் - மூஞ்சுறு கலியுகம் - எலி