உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

கே.பாமா, ரஜோரி கார்டன், டில்லி.*விரதத்தன்று பகலில் துாங்கலாமா...கூடாது. பகலில் துாங்காமல் கடவுள் சிந்தனையுடன் இருக்கவே விரதம் இருக்கிறோம்.சி.கருப்பையா, பணகுடி, திருநெல்வேலி.*சன்னதி முன் ஏற்கனவே ஏற்றிய விளக்கை நான் பயன்படுத்தலாமா?ஏற்றிய விளக்கை பயன்படுத்தலாம். பரிகாரத்திற்காக ஏற்றினால் புதிய விளக்கை பயன்படுத்துங்கள்.எம்.ராகவி, திருப்பனாம்பாக்கம், கடலுார்.*ஆஷாட நவராத்திரி என்றால் என்ன?ஆனி மாத அமாவாசைக்கு மறுநாள் முதல் ஒன்பது நாளும் ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படும். இது வராகியம்மனுக்கு ஏற்றது.எல்.பவித்ரா, ஜவ்வாதுபட்டி, திண்டுக்கல்.*பத்ரகாளி, பிரத்யங்கிரா, வராகியை வழிபட ஏற்ற நாள் எது?பத்ரகாளி - வெள்ளி பிரத்யங்கிரா - அமாவாசை வராகி - வளர்பிறை பஞ்சமி திதிஎஸ்.பவானி, மாதவரம், சென்னை.*முளைப்பாரியை வீட்டில் வளர்த்து கோயிலில் செலுத்தலாமா?செலுத்தலாம். அசைவத்தை தவிர்ப்பதும், தீட்டு சமயத்தில் ஒதுங்கியிருப்பதும் அவசியம்.கே.நாகராணி, அஞ்சுகிராமம், கன்னியாகுமரி. *எரியும் சூடம், தீபத்தை வாயால் ஊதக் கூடாதா?கூடாது. வாயால் ஊதினால் எச்சிலாகி விடும். புனிதமான பூஜைப்பொருட்களை அப்படி செய்யலாமா...எல்.கணேசன், ராமநாதபுரம், கோயம்புத்துார்.*பஞ்ச வாத்தியம் என்றால் என்ன?கோயில்களில் ஐந்து வகை இசைக்கருவிகள் இருக்கும். இதை சுவாமி புறப்பாட்டின் போது இசைப்பர். * தோல் - மேளம், மத்தளம் * துளை - நாதஸ்வரம், புல்லாங்குழல் * நரம்பு - யாழ், வீணை * உலோகம் - எக்காளம், கொம்பு, திருச்சின்னம் * இயற்கை - சங்கு, ஜலதரங்கம்.எம்.வனஜா, கனகபுரா, பெங்களூரு.*தீட்டுக்காலத்தில் கட்டிலில் படுக்கலாமா?படுக்கலாம். அப்போது உபயோகித்த அனைத்து துணிகளையும் தீட்டு கழிந்ததும் நீரில் நனைத்து உலர்த்துவது அவசியம். எம்.மாணிக்கவல்லி, சோழவந்தான், மதுரை.*எங்கள் குடும்பத்தினருக்கு முன்னோர் ஆசி கிடைக்க...தர்ப்பணம், திதி, சிராத்தம் கொடுப்பது முன்னோரின் ஆசி பெறுவதற்காகவே. அதனால்தான் அவர்களின் பெயரை குழந்தைகளுக்கு வைக்கிறோம்.