மனப்பாடப்பகுதி!
UPDATED : நவ 26, 2013 | ADDED : நவ 26, 2013
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.பொருள்: அன்பும் சிவமும் வெவ்வேறானவை என்று அறிவில்லாதவர்களே சொல்வர். அன்பே சிவம் என்பதை யாரும் அறியாமல் உள்ளனர். அன்பும் சிவமும் ஒன்று என்பதை உணர்ந்த ஞானிகள், அன்பு வடிவமாகி சிவகதியில் மூழ்கியிருப்பர்.