உள்ளூர் செய்திகள்

பிரசாதம் இது பிரமாதம் - பாஸந்தி

என்ன தேவைபால் - 800 மி.லி.,சர்க்கரை - 150 கிராம்பிஸ்தா பருப்பு - 5 கிராம்சாரப் பருப்பு - 5 கிராம்ஏலப்பொடி - 1/4 டீஸ்பூன்குங்குமப்பூ - சிறிதளவுபச்சைக்கற்பூரம் - சிறிதளவுஎப்படி செய்வது : பாத்திரத்தில் பாலை விட்டு அடுப்பில் மிதமான தீயில் சூடாக்கவும். பாலைக் கிளற வேண்டாம். பால் கொதித்து ஆடை படிந்து வரும். கெட்டி ஆடையாக வந்ததும் ஒதுக்கிப் பாத்திரத்தோடு ஒட்டினாற் போல பக்கவாட்டில் சேர்க்க வேண்டும். பால் வற்றி 150 மி.லிட்டராக வந்ததும் சர்க்கரையை சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கவும். பிறகு அதில் ஏலப்பொடி, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கலக்கவும். நன்றாக ஆறியபின் ஓரத்தில் ஒதுக்கி வைத்த ஆடையைத் தோசை திருப்பியால் சுரண்டி விட்டுக் கலந்து வைக்கவும். சாரப் பருப்பு, பிஸ்தா பருப்பு இவைகளைப் பொடியாக்கி சேர்க்க தித்திக்கும் பாஸந்தி ரெடி.