உள்ளூர் செய்திகள்

நிம்மதி தானாகவே வரும்

* தேவைகளை குறைத்துக்கொள். நிம்மதி தானாகவே வந்துவிடும். * தேங்கும் பணம் வளர வளர வாழ்வைக் கெடுக்கும்.* எதற்கெடுத்தாலும் பயப்படாதே. மீறினால் அதுவே கவலையை உண்டாக்கும். * தவறு செய்வது இயல்பு. ஆனால் அது மீண்டும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள். * அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு. அறிவால் உணர்ச்சியை வெல்வது உயர்வு.* எந்த நிலையிலும் யார் கோபப்படவில்லையோ, அவர் ஞானி. * நேர்மையும், உண்மையும் கொண்டவர்களுக்கு வரும் துன்பம் தற்காலிகமானதே. * தீராத பிரச்னை என்று எதுவும் இல்லை. தீர்க்கும் வழியை அறிவது தான் பிரச்னை. * வாழ்த்தும் போது நம்மைச் சுற்றி நல்ல அலைகள் உருவாகும். * நல்வழியில் அறிவைச் செலுத்தி உழைத்தால் வாழ்க்கையில் உயர்வடைவாய். * உடையில் ஒழுக்கம், உள்ளத்தில் கருணை, நடையில் கண்ணியம் இவை நல்லோர் பண்பு. * உணவில் எளிமை, உழைப்பில் கடுமை, ஒழுக்கத்தில் உயர்வு என்பதே உத்தமர் இயல்பு.* பணத்திற்கும் பண்பிற்கும் நடக்கும் போட்டியில், பண்பை காப்பாற்ற உறுதி வேண்டும். * யாரிடமும் பகை இல்லாமல் இரு. அது உலகையே உன் வசப்படுத்தி விடும்.என்கிறார் வேதாத்ரி