உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* சூரியன் அஸ்தமனமாகும் நேரத்தில் கர்ப்பிணிகள் சாப்பிடவோ குளிக்கவோ கூடாது. * தண்ணீரில் உங்களது உருவத்தை பார்க்கக்கூடாது. * திருமணமாகாத பெண்கள் துளசியால் பெருமாளை துதித்தால், விரைவில் கணவரின் வீட்டிற்கு சென்று சுபிட்சமாக வாழ்வர். * சுயபுத்தியை பயன்படுத்தாமல் பிறர் கூறுவதை கேட்டு செயல்படுபவனின் வாழ்க்கை, குடத்தில் இட்ட விளக்கைப் போல் பிரகாசம் இல்லாமல் இருக்கும். * ஒருவருக்கு முன்போ, பின்போ அமர்ந்து மந்திரங்களை ஜபம் செய்யக்கூடாது. * ஒருவர் தன் திறமையை அறியாமல் எந்த விஷயத்திலும் தலையிடக்கூடாது. * திறந்த வெளியில் காயவைத்திருக்கும் துணிகளை சூரியன் மறைந்த பின் எடுக்கக்கூடாது. * நதிகளில் நீராடும்போது நீர் வரும் திசையை நோக்கியவாறு தலை முழுகி ஸ்னானம் செய்ய வேண்டும்.