உள்ளூர் செய்திகள்

பொன்னாள் இதுபோல் வருமா இனிமேலே!

பொன்னாளான அட்சயதிரிதியை அன்று என்னவெல்லாம் நிகழ்ந்தது தெரியுமா?* நண்பர் குசேலர் கொடுத்த அவலை கிருஷ்ணர் சாப்பிட, செல்வம் சேர்ந்தது.* குபேரர் இழந்த செல்வத்தைப் பெற்றார்.* திருமகள் திருமாலின் மார்பில் இடம் பிடித்தாள்.* பலராமர் அவதரித்த நன்னாள். * முதல் யுகமான கிருத யுகத்தில் பிரம்மா உலகத்தைப் படைத்த நாள்.* ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தார். * திரவுபதி அட்சய பாத்திரம் பெற்றாள்.* திரவுபதியை மானபங்கம் செய்த போது, கிருஷ்ணர் ஆடை அளித்து காத்தார்.