நீ செய்த தர்மம் உன்னைக் காக்கும்
UPDATED : ஆக 25, 2023 | ADDED : ஆக 25, 2023
ஆக.25 பிறந்தநாள்* யார் உன்னை கைவிட்டாலும், நீ செய்த தானமும் தர்மமும் உன்னை கைவிடாது. * எந்தப் பணியிலும் நிதானத்துடன் ஈடுபடு. அப்படி செய்தால் அதன் சூட்சுமங்கள் புரியும். * நல்லவர்களின் கோபம் மோதிரம் கழற்றும் நேரத்திற்குள் மறைந்து விடும். * எப்போதும் கடவுளையே நினைத்தால் மனம் சுத்தமாகும். * மானம் காக்க ஆடையும், மனம் காக்க வழிபாடும் அவசியம்.* உனது வாழ்க்கை குடும்பத்துக்கும், நாட்டுக்கும் பயன் தருவதாக இருக்க வேண்டும். * பெற்றோரை விட சிறந்தவர் இவ்வுலகில் யாருமில்லை. * ஞானிகளைப் பழித்தவர் மறுபிறப்பில் சிரமப்படுவார். * உனக்கு வரும் துன்பமே உறவினரையும் நண்பர்களையும் அளக்கும் அளவுகோல். * எல்லாம் தெரிந்தவர்களும் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் இல்லை.* இந்த பிறவியில் செய்யும் நன்மைகளை மறுபிறப்பில் நிச்சயம் அனுபவிப்பாய்.* நியாயமற்ற வழியில் வரும் பணத்தை கையால் கூட தொடாதே. * அறிவு தரும் புத்தகங்களை படிக்காமல் இருப்பதே மக்கள் செய்யும் தவறு. * புத்தகத்தால் வரும் அறிவை விட அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானது.* கோபம் வரும் போது கண்ணாடியில் முகத்தைப் பார். உனக்கே வெட்கமாக இருக்கும்.* பலமுறை சிந்தித்த பிறகே எந்தவொரு விஷயத்திலும் ஈடுபட வேண்டும்.என்கிறார் வாரியார்