விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 12
அருள், பொருள் அருளும் லட்சுமீகணபதி லட்சுமி என்ற சொல்லுக்கு நேரடியான பொருள் செல்வம். கணபதியின் தேவியராக, சித்தி, புக்தி ஆகியோரை சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. சித்தி என்றால், வீடுபேறு: புக்தி என்றால் அனைத்து வகையான இன்பங்களின் அனுபவம், இவ்விரண்டையும் உயிர்களுக்கு இறைவனால் மட்டுமே வழங்க முடியும். இந்த தத்துவத்தைக் காட்டுபவர் தான் லட்சுமீ கணபதி. இவர், ஒரு திருமுகத்துடன் பத்துத் திருக்கரங்களுடன் திகழ்பவர். தியான சுலோகம் பிப்ராணஸ் சுக பீஜபூர கமலம் மாணிக்ய கும்பாங் குசான் -பாசங் கல்பலதாஞ்ச கட்க விலஸத் ஜ்யோதிஸ் ஸுதா நிர்ஜர:|ச்யாமேனாத்த ஸரோருஹேண ஸஹிதோ தேவீ த்வயே நாந்திகே -கௌராங்கோ வரதா நஹஸ்த கமலோ லக்ஷ்மீ கணேசோ Sவதாத் II சுக - கிளி பீஜுபூர - மாதுளம் பழம்கமலம் - செந்தாமரைமாணிக்ய கும்பம் - ரத்தினங்கள் அடங்கிய நிதிகும்பம்அங்குசம் - அங்குசம் எனும் ஆயுதம்பாசம் - பாசம் எனும் ஆயுதம்கல்ப லதாம் - தேவலோகத்துக் கற்பகமரத்துக் கொடி முனை கட்க - கத்தி எனும் ஆயுதம் (இவற்றைத் தனது எட்டுக் கைகளில்)பிப்ராண: விலஸத் - தாங்கி விளங்குகின்றவரும்ஜ்யோதிஸ் ஸுதா நிர்ஜர: - ஒளிரும் அமுதத் திருமேனியரும்ச்யாமேன ஆத்த - பசுமை நிற மேனியும் ஸரோருஹேண - தாமரையை ஏந்தியுமுள்ள தே²வீத்வயேந - (சித்தி, புக்தி ஆகிய) இரு தேவியர்களை அந்திகம் - தன் அருகில் சேர்த்துக் கொண்டிருப்பவரும் ஸஹித - கூடி இருப்பவரும் கௌராங்க: - வெண்ணிறத் திருமேனியரும் வரதாந ஹஸ்த கமலோ - அருள் வழங்கும் தாமரை போன்ற திருக்கரங்களை உடையவருமானலக்ஷ்மீ கணேச - லட்சுமீகணபதியானவர் (நம்மை எப்போதும்) அவதாத் - காப்பாற்றட்டும். கிளி: நாத தத்துவத்தைக் குறிக்கும். இன்பத்தின் அடையாளம். மாதுளம் பழம்: பிறவிப்பிணியைப் போக்கவல்ல இறைவன் கணபதி என்பதை விதை மிகுந்த இக்கனி உணர்த்துகிறது. செந்தாமரை: ஞானத்தையும் சூரியனால் கிடைக்கும் ஆரோக்கியத்தையும் குறிப்பது. பாசம், அங்குசம்: உயிரின் மூவகைப் பாசங்களை அகற்றுவதைக் குறிப்பது பாசம். புலனடக்கத்தையும் ஆணவ மலத்தை நீக்குவதையும் குறிப்பது அங்குசம். கற்பகக் கொடி: கற்பக மரம் போல், அடியவர்கள் வேண்டுவதை அருள்பவர் கணபதி என்பதைக் காட்டுகிறது. கத்தி: ஆயுதம். உயிரின் ஆணவப் படலத்தைக் கிழித்து பிறப்பறுப்பது. சித்தி, புக்தி ஆகிய இருதேவியர்: விநாயகர் அருள், பொருள் இவற்றை அளிப்பதைக் குறிப்பவர்கள். பலன்: அருளும் பொருளும் தடையின்றி கிடைக்கும். செல்வம் கிட்டும். அருள் தொடரும்... வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்