நீ சாட்சியாக இரு!
UPDATED : நவ 10, 2014 | ADDED : நவ 10, 2014
* சரணாகதியே வலிமை மிக்க பிரார்த்தனை. கடவுளிடம் நம்மையே முழுமையாக அர்ப்பணித்து விடுவதே சரணாகதி. * உண்ணாவிரதம் உடல் அளவில் மட்டும் இருப்பதல்ல. மனதளவிலும் முழுமையாக விரதத்தில் ஈடுபட வேண்டும். * உலகை நடத்துபவன் ஒருவன் இருக்கிறான். நீ சாட்சியாக மட்டும் இரு. 'நான் நான்' என்று கூறிக் கொண்டு எதிலும் முன் நிற்காதே. * மனிதன் எந்த அளவுக்கு பணிவுடன் நடக்கிறானோ அந்த அளவுக்கு நன்மையும் உண்டாகும். - ரமணர்