எல்லோரும் நல்லவரே!
UPDATED : ஜூன் 01, 2014 | ADDED : ஜூன் 01, 2014
* நல்ல மனம், கெட்ட மனம் என இரண்டு கிடையாது. எதைச் சார்ந்திருக்கிறதோ அதன் தன்மையை மனம் பெறுகிறது.* உலக விஷயங்களிலும், பிறருடைய அந்தரங்க வாழ்விலும் ஒருபோதும் எண்ணத்தைச் செலுத்துவது கூடாது.* பிறர் எவ்வளவு கெட்டவராக இருந்தாலும், அவர்களிடம் வெறுப்பைக் காட்டுவது நல்லதல்ல.* நான் பலமற்றவன் என்றோ, தீயவன் என்றோ நினைப்பதே மனிதன் செய்யும் மிகப் பெரிய தவறு.* ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அளப்பரிய தெய்வீகத் தன்மையும், வலிமையும் குடிகொண்டிருக்கிறது.- ரமணர்