காலம் கை கொடுக்கும்
UPDATED : ஏப் 01, 2015 | ADDED : ஏப் 01, 2015
* கடவுளிடம் முழுமையாக சரணடைந்து விடு. விரும்பிய அனைத்தும் உன்னை வந்தடையும்.* தவறான செயல்களில் ஈடுபடாதே. அகந்தை எண்ணத்தால் அதை மறைக்கவும் முயலாதே.* உன்னை கடவுளின் சிறு கருவியாக எண்ணிக் கொள். வாழ்வில் துன்பம் மறைவதைக் காண்பாய்.* ஒருவன் உண்ணும் உணவைப் பொறுத்தே, அவன் உள்ளத்தில் உணர்வுகளும் உண்டாகின்றன.* எதிர்காலம் குறித்த கவலை வேண்டாம். அது நிச்சயமாக உனக்கு கை கொடுக்கும்.-ரமணர்