சொந்தக்காலில் நில்லுங்கள்
UPDATED : ஜூலை 31, 2013 | ADDED : ஜூலை 31, 2013
* சொந்த வேலையில் மட்டும் கவனத்தைச் செலுத்துங்கள். பிறர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.* யார் மீதும் பகையுணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டாம். பிறரின் குறைகளை மன்னிக்கப் பழகுங்கள். மறந்து விட்டால் மிகவும் நல்லது.* எப்போதும் நல்ல விஷயத்தில் மனதைச் செலுத்துங்கள். வெறும் உணவால் மட்டும் மனிதன் உயிர் வாழ முடியாது. * தர்மநெறிமுறைகளை உபதேசித்த பெரியவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள். நல்ல நூல்களை அன்றாடம் வாசிப்பது அவசியம்.* சுதந்திர உணர்வுடன் வாழ்வதே மகிழ்ச்சிக்கான வழி. எனவே, யாரையும் நம்பி இருக்காமல் சொந்தகக் காலில் நில்லுங்கள்.* பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள். அவற்றை திறமையுடன் நிறைவேற்ற முயலுங்கள்.- சிவானந்தர்