| ADDED : மார் 11, 2024 07:23 PM
வெடிக்காத பேட்டரிஇன்று
பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களும் மீண்டும் சார்ஜ் செய்து கொள்ளும்
பேட்டரியில் இயங்குகின்றன. ஆனால் இவை சில சமயம் வெடித்த சம்பவங்களும்
நடந்துள்ளன. இதற்கு தீர்வு காணும் விதமாக மறுசுழற்சி செய்யக்கூடிய,
வெடிக்காத 'தண்ணீர் பேட்டரியை' ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இது மாங்கனீசு அல்லது ஜிங்க் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது எளிதில்
கிடைக்கக்கூடியது. சுற்றுச்சூழலுக்கும் குறைந்தளவே தீங்கு விளைவிக்கும்.
தற்போதைய லித்தியம் பேட்டரிக்கு மாற்றாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள்
தெரிவிக்கின்றனர்.தகவல் சுரங்கம்
ஜனநாயகத்தின் துாண்தேர்தல்
ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. அரசியலமைப்பு சட்ட விதி 324
அங்கீகாரம் வழங்குகிறது. இது 1950 ஜன. 25ல் தொடங்கப்பட்டது. இதில் ஒரு
தலைமை தேர்தல் ஆணையர், இரண்டு தேர்தல் ஆணையர்கள் உள்ளனர். ஐ.ஏ.எஸ்.,
அதிகாரிகள் இப்பதவியில் நியமிக்கப்படுகின்றனர். பதவிக்காலம் 6 ஆண்டு
அல்லது 65 வயது. லோக்சபா, ராஜ்யசபா, மாநில சட்டசபை, ஜனாதிபதி, துணை
ஜனாதிபதி தேர்தல்களை நடத்துகிறது. 300 பேர் பணியாற்றுகின்றனர்.
மாநிலங்களில் தேர்தல் ஆணையத்திற்கு தலைவராக தலைமை தேர்தல் அதிகாரி
இருப்பார்.