தினமலர் செய்தியால் தீர்வு
கொட்டாம்பட்டி : கச்சிராயன்பட்டி மந்தை இருட்டாக காணப்பட்டது. கால்நடைகள் திருடு போனதோடு, மக்கள் இரவில் நடமாட முடியாமல் வீட்டிற்குள் முடங்கினர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக பி.டி.ஓ., ஜெயபாலன் தலைமையில் உயர் மின் கோபுர விளக்கு சரி செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.