உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இதுவும் அந்நாட்டு கட்டுப்பாடா?

இதுவும் அந்நாட்டு கட்டுப்பாடா?

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில், ஜப்பான் நாட்டுக்கான ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில், சங்கத்தின் மூத்த உறுப்பினர் மைக்கோ வேலுசாமி பேசுகையில், 'ஒருமுறை டோக்கியோ கண்காட்சிக்கு சென்றிருந்தேன். ஆடை தயாரிப்பு ஆர்டர் பெறலாம் என்ற நம்பிக்கையில், கண்காட்சியில் வழங்கிய எண்ணுக்கு வர்த்தகரை தொடர்பு கொண்டேன். அவர் என் போன் அழைப்பை ஏற்கவில்லை' என்றார்.இதற்கு பதிலளிக்கும் வகையில், கோவையில் இயங்கும் ஜப்பானுக்கான தர பரிசோதனை நிறுவன பிரதிநிதி கார்த்திக் பேசுகையில், 'ஜப்பானியர்கள் பஸ், ரயில் உள்ளிட்ட பயணங்களின் போதும், பொது இடங்களில் வைத்தும் மொபைல் போன் பயன்படுத்த மாட்டார்கள். எப்போதுமே கட்டுப்பாடுகளை மீற மாட்டார்கள்' என்றார்.இதைக் கேட்ட ஏற்றுமதியாளர் ஒருவர், 'அட, மிஸ்டு கால் பார்த்து திரும்ப கூப்பிடக் கூடாதா... இதுவும் அந்த நாட்டு கட்டுப்பாடா...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஜூலை 10, 2024 16:42

அவர்கள் அழைக்கவில்லை என்றாலே அவர்களுக்கு இதில் நாட்டம் இல்லை என்று புரிந்துகொள்ள முடியாதா ?


karthik
ஜூலை 10, 2024 13:49

ஜப்பானியர்கள் அப்படித்தான்..முதலில் அவர்களிடம் அப்பொய்ன்ட்மென்ட் வாங்க வேண்டும். அல்லது உங்களைப்பற்றிய செய்தியை மொபைல் அல்லது ஈமெயில் அனுப்பவேண்டும். உங்களுக்கு ஆர்டர் தருவதாக இருந்தால் மட்டுமே உங்களை தொடர்பு கொள்வார்கள்.. இல்லை என்றால் எத்தனை வருடம் ஆனாலும் தொடர்புகொள்ள மாட்டார்கள்.


சமீபத்திய செய்தி