உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; ரேஷனில் பாமாயில், பருப்பு வினியோகிக்காததால் ஏமாற்றம்

செங்கல்பட்டு: புகார் பெட்டி; ரேஷனில் பாமாயில், பருப்பு வினியோகிக்காததால் ஏமாற்றம்

ரேஷனில் பாமாயில், பருப்பு வினியோகிக்காததால் ஏமாற்றம்

திருப்போரூர் பேரூராட்சி, திருவஞ்சாவடி தெருவில் ரேஷன் கடை உள்ளது. இதில், 500க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். மாதந்தோறும் ரேஷனில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.ஆனால், கடந்த ஒரு மாதமாக எண்ணெய், பருப்பு மட்டும் வழங்கவில்லை. கடைக்கு சென்று கேட்கும் போதெல்லாம் இல்லை என்ற பதில் தான் வருகிறது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், எங்கள் பகுதி ரேஷன் கடையில், எண்ணெய், பருப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.ரமேஷ், திருப்போரூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை