உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; நிழற்குடை இருக்கையில் பெயர்ந்து விழும் டைல்ஸ்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; நிழற்குடை இருக்கையில் பெயர்ந்து விழும் டைல்ஸ்

நிழற்குடை இருக்கையில் பெயர்ந்து விழும் 'டைல்ஸ்'

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஓரிக்கை காந்தி நகர் பேருந்து நிறுத்தத்தில், 2023ம் ஆண்டு பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. நிழற்குடையில் பயணியர் அமர்வதற்காக இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தில் ஒட்டப்பட்டுள்ள டைல்ஸ் ஒவ்வொன்றாக பெயர்ந்து இருக்கையில் விழுகின்றன. டைல்ஸ்கள் திடீரென பெயர்ந்து விழும் போது, பயணியர் காயமடையும் சூழல் உள்ளது. எனவே, பெயர்ந்து விழும் டைல்ஸ்களை அப்புறப்படுத்தி, சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எம்.ராஜமாணிக்கம், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !