கேடு விளைவிக்கும் அழகு சாதனப்பொருட்கள்!
அண்மையில் தேசிய விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப ஆட்சிக் குழுவின் ஆதரவினால், கல்கத்தாவில் நடைபெற்ற கருத்தரங்கு, அழகு சாதனப் பொருட்களால் விளையும் தீங்குகளை விஞ்ஞானப் பூர்வமாய் தெளிவாக்கியுள்ளது.முதல் தரம் என்று விற்கப்படும் பற்பசைகள், முகச்சவரச் சோப்பு பசைகள், உதட்டுச் சாயங்கள், 'லூகோடெர்மா' என்ற தோல் வியாதியைத் தூண்டுகின்றது. வாசனைச் சோப்புகள் மற்றும் 'டிடெர்ஜெண்ட்' கட்டிகளில் உள்ள என்சைம்களும், மென்காரங்களும் தோல் அரிப்பை ஏற்படுத்துகின்றது. உதட்டுச் சாயம், பொட்டு, தோலின் நிறமாற்றத் திற்காகப் பயன்படுத்தப் படும் சிறப்புப் பசைகளில் உள்ள 'பாராபினைலின் டையாடமி' மற்றும் 'போரிக் அமிலம்' போன்றவை தோலைப் பராமரிக்கும் செல்களை உதிர்க்கின்றன. இதனால் தோலின் இயற்கையான நிறம் மாறுவதுடன் உலர்ந்து விரைவில் சுருங்கியும் விடுகின்றன. கண்மை, கண்ணில் எரிச்சலூட்டி, விரைவிலேயே கண் பார்வையை மங்கிப் போய் விடும்படி செய்கிறது. எனவே, அழகு சாதனப் பொருட்களை முடிந்தவரை விலக்கி வருவது உடல்நலத்தைப் பாதுகாக்கும்.***