தேன் மிட்டாய்!
தேவையான பொருட்கள் உளுந்தம் பருப்பு - 2 கப் மைதா மாவு - 0.5 கப் அரிசி மாவு - 0.5 கப் சர்க்கரை - 1.5 கப் எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை :உளுந்தம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து அரைக்கவும். அதில் மைதா, அரிசி மாவுகளை கலந்து, சிறு உருண்டைகளாக பிடித்து, கொதிக்கும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சர்க்கரையுடன் தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து பாகாக்கி, பொரித்த உருண்டைகளை அதில் போடவும். நன்றாக ஊறிய பின் பிரித்தெடுக்கவும்.சுவை மிக்க, 'தேன் மிட்டாய்!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.- மு.சுகாரா, ராமநாதபுரம்.தொடர்புக்கு: 98658 84768