உள்ளூர் செய்திகள்

இறுதி சடங்கிற்கும் ரோபோ!

ஜப்பானில், மருத்துவமனை மற்றும் வங்கிகளில் ரோபோக்களிடம் சில பணிகளை ஒப்படைத்துள்ள நிலையில், தற்போது, மனிதர்களின் இறுதி சடங்கை செய்வதற்கும் ரோபோவை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.ஜப்பானில், பெரும்பாலா னோர் புத்த மதத்தை பின்பற்று பவர்கள். இங்கு, இறப்புக்கு பின், செய்யப்படும் இறுதி சடங்கிற்கு பல்வேறு சடங்குகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.இச்சடங்கு செய்யும் புத்த துறவிகளுக்கு, தற்போது, கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால், அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்தால் தான், இறுதி சடங்கு செய்ய வருகின்றனர்.இப்பிரச்னையை தவிர்க்க, தற்போது, இறுதி சடங்கு செய்யும் பணிகளில், ரோபோக்களை ஈடுபடுத்த துவங்கியுள்ளனர்.பெப்பர் என்று அழைக்கப்படும் இந்த ரோபோக்களால், இறுதி சடங்கிற்கான செலவு, கணிசமாக குறைந்துள்ளதாக, மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர், ஜப்பனிய மக்கள்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !