துளசி!
* மற்ற செடிகளை விட, கரியமில வாயுவை அதிகமாக எடுத்து, நாள் ஒன்றுக்கு, 20 மணி நேரம் ஆக்சிஜனை வெளியிடும் தன்மை துளசி செடிக்கு உண்டு. இதை கருத்தில் கொண்டே, நம் முன்னோர், வீட்டின் நடுவே முற்றத்தில் துளசி மாடத்தை வைத்தனர்.* கர்ப்பப்பை கோளாறு காரணமாக, குழந்தை பேறு இல்லாமல் இருப்பவர்கள், துளசியை சாப்பிடும் போது, குழந்தை பேறு கிட்ட வாய்ப்புள்ளது.* நீரிழிவு நோயாளிகள், உணவு கட்டுப்பாட்டுடன், துளசி இலைச்சாறை தொடர்ந்து சாப்பிட, இன்சுலின் அளவு கட்டுப்படும். மேலும், சுவாச பாதைகளை சரிசெய்வதிலும், துளசிக்கு தனியிடம் உண்டு.*சத்யபாமா, கிருஷ்ணரின் எடைக்கு எடை, நகை இட்டபோது உயராத துலாபாரம், ருக்மணி ஒரே ஒரு துளசி இலையை இட்ட போது, எடை சமமானதாக கூறும் புராண கதையின் மூலம், துளசியின் மகத்துவத்தை அறியலாம்.