உள்ளூர் செய்திகள்

இயர் போன் பயன்படுத்துகிறீர்களா?

இயர் போன் கருவியை, காதுடன் நெருக்கமாக பயன் படுத்தக் கூடாது.* தான் பயன்படுத்தியதை, மற்றவருடன் பகிரக் கூடாது; அதனால், பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.* இயர் போனை தொடர்ந்து பயன்படுத்தாமல், ஒரு மணி நேரத்திற்கு ஐந்து முதல், 10 நிமிடம் இடைவெளி விட வேண்டும்.* சத்தம் அதிகமாக வைத்து கேட்பதை தவிர்க்கவும். 85 டெசிபலுக்கு மேல் தொடர்ந்து, 15 நிமிடம் பயன்படுத்தினால், கேட்கும் தன்மையை இழக்க நேரிடும்.* காதில் மாட்டும் போது, வெளிக்காற்று உள்செல்லும்படி ஒருபுறமாக சாய்த்து, பயன்படுத்த வேண்டும்.நவீன தொழில்நுட்ப கருவி எதை பயன்படுத்தினாலும், அளவுக்கு மீறினால், அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்கக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !