உள்ளூர் செய்திகள்

நோபல் பரிசு வந்த விதம்!

நோபல் பரிசு பற்றி அறியாதவர்கள் மிக குறைவு. சுவீடன் நாட்டில் வாழ்ந்த, ஆல்பிரட் நோபல் என்ற விஞ்ஞானி, டைனமிட்டை கண்டுபிடித்து எக்கச்சக்கமாக பணம் சம்பாதித்தார். அவரது சகோதரர் இறந்த போது, ஆல்பிரட் நோபல் இறந்ததாக நினைத்த பத்திரிகை ஒன்று, 'கொலை வியாபாரி மறைந்தார்!' என, செய்தி வெளியிட்டது. இதை கண்டு மனமுடைந்த, ஆல்பிரட், தான் சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியை, பல துறைகளில் சாதனை புரிபவர்களுக்கும், அமைதிக்காக உழைத்தவர்களுக்கும் பரிசாக வழங்க முடிவு செய்தார். அது தான், நோபல் பரிசு. ஸ்வீடன் நாட்டில், காம்லா ஸ்டான் நகரில் அமைக்கப்பட்டுள்ள, நோபல் அருங்காட்சியகத்தில், நோபல் பரிசு பெற்றவர்கள் கையெழுத்து போட்ட நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன. — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !