உள்ளூர் செய்திகள்

இருபது பெற்றெடுத்த மகராசி

உக்ரைன் நாட்டில் ஒரு பெண் தன், இருபதாவது குழந்தையை பெற்று, சாதனை படைத்துள்ளார்.உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் ஒரு கிராமத்தில் வசிக்கும் அந்த பெண்ணின் பெயர், லியோனோரா நமினி; வயது 41. சமீபத்தில் இவருக்கு, இருபதாவது குழந்தை பிறந்தது. இதன் மூலம், இவருக்கு, பத்து ஆண், பத்து பெண் குழந்தைகள் உள்ளனர்.இவரது மூத்த மகன் பெயர் ஜோனாதன்; வயது இருபது. அவருக்கு திருமணம் ஆகி விட்டது. மேலும், ஆறு குழந்தைகள் வேலைக்கு செல்கின்றனர். எட்டு குழந்தைகள் பள்ளியில் படிக்கின்றனர். ஆறு குழந்தைகள் துவக்க பள்ளியில் படிக்கின்றனர். இந்த குழந்தைகளின் தந்தை பெயர் ஜனோஸ் நமினி. அவருடன் கூட பிறந்தவர்கள் மொத்தம், 16 பேர். தாய் லியோனோரா, அவரது குடும்பத்தில், 14வது நபர்.'இத்துடன் குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்தப் போவதில்லை. இன்னும், அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்வேன்...' என்கிறார் லியோனோரா.மிக அதிக குழந்தைகளைப் பெற்று, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பெண் யார் தெரியுமா? சிலி நாட்டில் வசிக்கும் லியோன்டினா அல்பினா என்ற பெண்தான். இவர், இதுவரை, 55 குழந்தைகளைப் பெற்றுள்ளார். — ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !