உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

காதல் வந்ததால்...* என்னால் மட்டும்துளையில்லாத புல்லாங்குழல்இசைக்க முடிகிறது!* என் தோட்டத்தில் மட்டும்மலர்கள்வான் நோக்கி உதிர்கின்றன!* நான் பார்க்கும்கண்ணாடியில் மட்டும்அவள் முகம் தெரிகிறது!* என் விழிகள் உறங்கியும்நான் உறங்காத இரவுகள்எத்தனை எத்தனை!* என்னை நானே சுற்றிக் கொண்டுஅவளையும் சுற்றி வருகிறேன்!* பெருங்குடல்சிறுகுடலை தின்றாலும்என், 'நா' உண்ண மறுக்கிறது!* பாதங்களில்முள்ளை ஏற்றிக் கொண்டுபுன்னகைக்கிறேன்!* இன்றுதான்எனக்குள் தூங்கும் மிருகம்தமிழ் பேசுகிறது!* வானவில்லின்எட்டாவது நிறம்எனக்கு மட்டும் எட்டுகிறது!* மை இல்லாத பேனாவில்கவிதை எழுதுகிறேன்!* உரசி செல்லும் காற்றிலும்கோபப்படுகிறேன்!* இதயம் கூட மிரட்டுகிறது!அவள் அருகில்இல்லாத உன்னுள்-நான்துடித்தால் என்ன...வெடித்தால் என்ன என்று!— அருண், திருவாரூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !