உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

வேண்டும், வேண்டும்!எத்தனையோ தோல்விகள் எதிர் வந்தாலும்எத்தனை தடைகள் இடறி விட்டாலும்அத்தனையும் தாண்டும் ஆற்றல் வேண்டும்!நேற்றைய நினைவுகளில் நிலைகுலையாமல்நாளைய நினைவுகளில் நசுங்கி விடாமல்இன்றைய நினைவுகளில் நிலைக்க வேண்டும்!கெடுக்கின்ற கெட்ட குணம் இல்லாமல்தடுத்துவிடும் பொறாமை மனம் இல்லாமல்கொடுத்து மகிழும் கொள்கை வேண்டும்!பழி வாங்கும் பாதகம் செய்யாமல்குழி பறிக்கும் கொடூரம் இல்லாமல்வழி காட்டும் வல்லமை வேண்டும்!எதிலும் நம்பிக்கையின்றி நலியாமல்விதியை எண்ணி வீழ்ந்து விடாமல்புதிய சாதனை படைக்க புறப்பட வேண்டும்!போதையெனும் புழுதியில் புரளாமல்பாலியல் எனும் படுகுழியில் விழாமல் - நல்லபாதை அமைக்கும் பக்குவம் வேண்டும்!வன்முறையெனும் அரக்கனை அழித்துவஞ்சகம் எனும் வலையை அறுத்துநன்முறை காணும் நாட்டம் வேண்டும்!பொய்களை சொல்லி பிழைப்பு நடத்தாமல்புரணிகள் பேசி பூசல்கள் வளர்க்காமல்மெய்களை பேசும் மேன்மை வேண்டும்!சோம்பல் எனும் பாவியை அழித்துசோர்வு எனும் நோய்தனை ஒழித்துசுறுசுறுப்பு என்றும் சுடர்விட வேண்டும்!படுத்து கிடந்தால் நிலமே நமக்கு பாயாகும்எழுந்து நடந்தால் அதுவே நமக்கு பாதையாகும்எடுத்த முயற்சியில் ஏற்றம் வந்தால்எல்லாம் வெற்றியாய் இனிதே முடியும்!இளசை சுந்தரம், மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !