கவிதைச்சோலை!
இருபது... இருபது!பிறக்கும்இருபது இருபதுமும்மாரி கொடுக்கமுளைப்பாரி எடுக்குமோ...முயற்சிகள் ஜெயிக்கமுன்மாதிரி படைக்குமோ!இருபது இருபதுஇறகுகள் விரித்துகனவில் பறக்குமோ...இருபது இருபதுஎனும் அறிவைக் கொடுக்குமோ!இருபது இருபதுவிளையாட்டில் இந்தியாவிஸ்வரூபம் எடுக்குமோ...விசுவாமித்ர சூளின்விலா எலும்பு முறிக்குமோ!இருபது இருபதுஆணுக்கு பெண்ணைசமமென ஆக்குமோ...சமத்துவ எதிரிகட்குசமாதி வைக்குமோ!இருபது இருபதுபெறுவதும், தருவதும்குறைபடாது நடக்குமோ...குரோத மனப்பான்மையின்குடலினைச் சரிக்குமோ!இருபது இருபது'இந்தியா... இப்படி' எனும்அணு விஞ்ஞானி கனவைஅரங்கேற்றி வைக்குமோ...அறிவியல் ஆபத்துகளைஅடியோடு அழிக்குமோ!இருபது இருபதுசந்தத்தில் இருப்பதால்சங்கீதம் இசைக்குமோ...சரித்திர ஏடுகளைச்சாலமிட அழைக்குமோ!இருபது இருபதுநீதியும், நேர்மையும்கைகோர்த்து நடக்குமோ...நிழலுலக, 'தாதா'க்கள்மென்னியை நெரிக்குமோ!இருபது இருபதுஆழ்துளை கிணறுகளின்ஆபத்தை குறைக்குமோ...அருகாடும் பிள்ளைகள் முன்வாய் மூடி கிடக்குமோ!இருபது இருபதுநேசத்தை துாவிநிம்மதி கொடுக்குமோ...நித்திரை கெடுக்கின்றநீசரை முடிக்குமோ!இருபது இருபதுவெற்றிக் கொடி நாட்டும்ஆண்டாய் இருக்கட்டும்...விண்ணுலக சொர்க்கத்தைமண்ணுலகம் பார்க்கட்டும்!வளர்கவி, கோவை.