வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இது காலம் காலமாக இருக்கிற அடிமை நிலை - பெண்களுக்கு சௌகரியம் கணவன் ஒழுங்காக இருக்கும் வரை. அது என்ன எப்போது பார்த்தாலும் பெண்களுக்கு திருமணம் செய்து இந்த சீர் அந்த சீர் செய்வது? அந்த மகள்கள் படித்து வேலைக்கு போய் self sufficeint ஆக அல்லவா இருக்க வேண்டும்? ஆண் மக்கள் என்றால் இந்த விவாதம் வருமா? மூன்றாவது பெண்ணாவது புத்திசாலித்தனம் மற்றும் பொறுப்போடு படிப்போடு வேலை எப்படி செய்வது என்று பார்க்க வேண்டும். இந்த அம்மா வுக்கு 19th நூற்றாண்டு வசதி வேண்டும் 21st நூற்றாண்டின் உரிமைகளும் வேண்டும். இந்த அம்மாவுக்கு உதவி செய்யும் தந்தையையும் குறை சொல்லவேண்டும். கேடு கேட்ட கணவனின் போட்டோவுக்கு மாலை போட்டு வீட்டில் மாட்டி அவன் செத்து விட்டான் என்று நினைத்து செயல் பட வேண்டும். சட்டப்படி விவாக ரத்து வாங்கி இனிமேலாவது சொந்த காலில் நிற்கும் வழி பார்க்கவும்.
இதனால் தான் சில காவல் துறை நபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் அவர்கள் செய்த பாவங்களுக்கு, பல குடும்பங்களை கெடுத்த பாவங்களுக்கு சரியான பாவ பலன்களை அனுபவிக்கிறார்கள்.
55 வயதில் கணவர் வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு கொண்டுள்ளார் என்று கூறினீர்கள். குற்றவாளி அவர் மட்டுமல்ல முக்கிய குற்றவாளி நீங்களாகத்தான் இருக்கும் கடைசி காலத்தில் ஆண்களுக்கு அரவணைப்பு தான் தேவை. அதை உங்களிடம் எதிர்பார்த்திருந்த நிலையில் கிடைக்காமல் இருந்து இருக்கலாம் . அதனால் அதை தேடி அவர் வேருடன் சென்றிருப்பார். அதனால் நீங்கள் நன்றாக யோசித்து பார்த்தால் நன்மை பயக்கும்.
இந்தியாவில், திருமணத்திற்குப் புறம்பான உறவு இனி ஒரு குற்றச் செயல் அல்ல அதாவது, ஏமாற்றியதற்காக மட்டுமே ஒரு அதிகாரியை சிறையில் அடைக்க முடியாது, இருப்பினும், தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் புறக்கணித்துவிட்டு திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபடும் ஒரு காவல்துறை அதிகாரி கடுமையான சட்ட விளைவுகளையும் துறை ரீதியான நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரிடும். 1. துறை ரீதியாகப் புகார் அளித்தல் மிகவும் பயனுள்ளது ஒரு காவல்துறை அதிகாரியாக, அவர் உயர் ஒழுக்க நடத்தையைக் கோரும் சேவை விதிகளுக்குக் கட்டுப்பட்டவர். எங்கு புகாரளிப்பது: காவல் கண்காணிப்பாளர் SP, காவல் துணை ஆணையர் DCP அல்லது அந்த மாவட்டத்தின் காவல் புகார்கள் ஆணையத்திடம் எழுத்துப்பூர்வமாகப் புகாரைச் சமர்ப்பிக்கவும். உள்ளடக்கம்: அவரது கள்ள உறவு மற்றும் குடும்பத்தைப் புறக்கணித்ததற்கான ஆதாரங்களை வழங்கி, அவரது நடத்தையை விவரிக்கவும். நடவடிக்கை: உயர் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கலாம், அவரைப் பணியிடை நீக்கம் செய்யலாம் அல்லது "ஒரு அரசு ஊழியருக்குப் பொருந்தாத நடத்தை"க்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். இணையவழி விருப்பம்: நேரடியாகப் புகார் அளிக்க மாநில காவல்துறைத் துறையின் இணையதளத்தைப் பயன்படுத்தவும். அவர் நிதி உதவி வழங்கவில்லை என்றால், உணவு, தங்குமிடம் மற்றும் கல்விக்கான நிதியைப் பெறுவதற்கு நீங்கள் ஜீவனாம்சம் கோரி மனு தாக்கல் செய்யலாம். சட்ட நடவடிக்கை: குடும்ப நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125-இன் கீழ் தற்போது பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா - பி.என்.எஸ்.எஸ்-இன் பிரிவு 144-ஆல் பெருமளவில் மாற்றப்பட்டுள்ளது ஒரு மனுவைத் தாக்கல் செய்யுங்கள். இடைக்கால ஜீவனாம்சம்: வழக்கு நிலுவையில் இருக்கும்போது, உடனடி, தற்காலிக ஜீவனாம்சத்தைக் கோரலாம். குழந்தைகள்: திருமண தகராறுகளைப் பொருட்படுத்தாமல், தனது குழந்தைகளைப் பராமரிப்பது தந்தைக்கு சட்டப்படி பொறுப்பாகும்.
ஏன் இப்படி செய்கிறார்கள் சில ஆண்கள்? தினமலர் மேடம் சொன்னபடி சட்டப்படி போராடினால் வெற்றி நிச்சயம். வாழ்க வளமுடன்