கவிதைச்சோலை - எங்கெங்கும் பூக்கள்!
வெயிலுக்கொரு பூமழைக்கொரு பூபனிக்கொரு பூபன்னிரண்டாண்டுகள்தவமிருந்து பூக்கும் ஒரு பூ!காலையில் ஒரு பூமாலையில் ஒரு பூஇரவினில் மலர்ந்துவிழித்திருக்கும் ஒரு பூ!வாசனைக்கு ஒரு பூவண்ணங்களுக்காக ஒரு பூவாழத் தொடங்கும் மனங்களுக்குவாழ்த்துச் சொல்லும் ஒரு பூ!சாமிக்கொரு பூசவத்துக்கொரு பூசாமிகளுக்கு நடுவில்பொய் சாட்சியானதால்சபிக்கப்பட்டது ஒரு பூ!நீர்ப் பூ நிலப்பூகொடிப் பூ மரப்பூ...ஆயிரமாயிரம் பூக்கள்விதவிதமாய் பூத்திருந்தாலும்வீதியின் ஓரத்தில்முழம் போட்டு விற்பவளின்வயிற்றைக் கழுவும்அந்தப் பூதான்சிறப்பினும் சிறப்பு!-இ.எஸ்.லலிதாமதி, சென்னை.