உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: எல்லாமே உன்னாலே...

* எல்லாமே உன்னாலே...நீ குடிசையில் இருப்பதும் கோபுரத்தில் வாழ்வதும்பணக்காரனாக இருப்பதும் ஏழையாக மடிவதும்எல்லாமே உன்னாலே தான்!* நீ அறிவாளியாக ஆவதும் முட்டாளாக வாழ்வதும் தலைவனாக இருப்பதும் தறுதலையாக போவதும்எல்லாமே உன்னாலே தான்! * நீ தொண்டு செய்வதும் சுயநலமாய் சீரழிவதும்திருடனாய் மாறுவதும் புனிதனாய் ஆவதும்எல்லாமே உன்னாலே தான்!* நீ கோபத்தில் வாளேந்துவதும்கொலைகாரனாவதும் பொறுமையாய் இருப்பதும்குடும்பத்தை காப்பதும்எல்லாமே உன்னாலே தான்! * நீ நல்லோர் ஆட்சியை தேர்ந்தெடுப்பதும்தீயோர் ஆட்சியை தேர்ந்தெடுப்பதும் சரித்திரத்தில் பேர் வாங்குவதும்சாதனைகள் படைப்பதும்எல்லாமே உன்னாலே தான்! * நீ மகாத்மா காந்தியாவதும் கொடூரமான ஹிட்லர் ஆவதும் சேவை செய்வதும் சிறப்புடன் வாழ்வதும்எல்லாமே உன்னாலே தான்!* உன் வாழ்க்கையை எப்படி தீர்மானிக்கிறாய் என்பது உன் கையில் தான் உள்ளது! * உன் மனதில் என்ன நினைக்கிறாயோஅதுவே நடக்கும்சரியான முடிவுகள் சரியான திட்டங்கள்உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்றனநல்லது நினைத்தால் நல்லது நடக்கும்கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும்உன் வாழ்க்கை உன் கையில் தான்!- எம்.பாலகிருஷ்ணன், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !