உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: மறந்துவிடாதே!

பெண்ணே!சாத்தான்கள் ஓதிடும்வேதங்களிலிருந்து விலகி வா...ஆறாவது அறிவைபயன்படுத்தத் தவறிடாதே!கானல் நீரைஉண்மையென நம்ப வைத்துஉன்னை திசை திருப்பிகுட்டையைக் குழப்பிவிடகாத்திருக்கும் சுயநலவாதிகளிடம்சிக்கிக் கொள்ளாதே!புதுமைப் பெண்புரட்சிப் பெண் என்றபோதையில் சிக்கிகலாசாரம், பண்பாடு எனும்மதிப்புமிகு பாதையிலிருந்துவிலகிப் போய் விடாதே!புகழ்ச்சிக்கும்போலியான வர்ணனைக்கும்மதிமயங்கிப் போய்கற்புக்குத் துாண்டிலிடும்கயவர்களிடம் ஏமாந்து விடாதே!உன்னை விடஇமயம் உயரமில்லை...உன் உள்ளத்தின் உறுதியை விடஇரும்பு திடமில்லை...தன்னம்பிக்கையை ஒருபோதும்கைவிட்டு கலங்கி நிற்காதே!உன் அழுகைஉனக்கு ஆயுதமென்று கூறும்அபத்தமான கருத்தைஏற்றுக் கொண்டு ஏமாந்துஎதிர்த்திடும் திராணியற்றுமூலையில் முடங்கி விடாதே!உதவிகளில் உள்நோக்கமும்ஆறுதலில் கள்ளத்தனமும்ஒளித்து வைத்துஉன்னை அணுகும் கயவர்களின்அடையாளத்தைக் கண்டுதப்பித்துக் கொள்...அப்பாவியாய் நம்பி விடாதே!போராட்டம் இல்லாதவாழ்க்கை எவருக்குமில்லை...எதிர்ப்புகள் இல்லாதஏற்றங்கள் சுவைப்பதில்லை!தடைகளைத் தாண்டாமல்சாதனைகள் நிகழ்வதில்லை...தோல்விகளைக் கடக்காமல்வெற்றிகள் கிட்டுவதில்லை...மங்கையே இதை மறந்து விடாதே!— இந்திராணி ஆறுமுகம், கடலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !