கவிதைச்சோலை - குடியரசு தின சபதம்!
அடிமை சங்கிலி தகர்த்துவிடுதலைக்கு வித்திட்டுகுடியுரிமை பெற்று தந்தவீரத் தலைவர்களின்பாதம் பணிவோம்!சீர்மிகு இளைஞர்கள்கல்விதனில் சிறந்துநன்னெறிகள் காத்துவாழையடி வாழையாகதலைமுறை காக்கட்டும்!நாட்டை சீரழிக்கும்பிரிவினைவாதிகளின்தீய சக்திகளை வீழ்த்திசமத்துவம் வித்திட்டுசம உரிமை பெறட்டும்!இயற்கை வளம்சூறையாடும் தேச விரோதஒட்டுண்ணிகளைமண்ணில் சாய்த்துமண் வளம் சிறக்கசட்டம் வலுப்பெறட்டும்!புரையோடி கிடக்கும்ஊழலின் ஊற்றுக்கண்அடைத்து, மக்கள் நலன்காக்கும் நிர்வாகம்அமைய ஒன்றுபட்டுஎழுச்சி காணட்டும்!நரம்புகள் புடைத்துவார்த்தைகள் தடித்துஇன ஒற்றுமையைசீர்குலைக்கும்மத தீவிரவாதத்தைவேரோடு சாய்த்துஇந்திய பேரரசின்மகத்துவம் போற்றட்டும்!அகிம்சை வென்றதுகுடியுரிமை கிடைத்ததுதனி சட்டம் உருவானதுஒற்றுமை கனிந்ததுகாலத்தை வென்றுதலைமுறை காக்கும்பண்பாடு சிறக்கட்டும்!ஒற்றுமை நிலைக்கட்டும்மக்கள் நலன் சிறக்கட்டும்தேசிய கொடி பறக்கட்டும்தேச பக்தி ஒளிரட்டும்தேசியம் ஓங்கட்டும்!குடியரசு தின நன்நாளில்நாம் சபதம் ஏற்போம்!— வி. சுவாமிநாதன், சென்னை.