உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - நாம் பெற்ற வரங்களே!

யாரோ ஒருவர் செய்தசாதனைகளில் தான்வாழ்க்கைச் சக்கரம்சுழல்கிறது!யாரோ ஒருவர்நட்டு வைத்த விதையின்மர நிழலில் தான்இளைப்பாறுகிறோம்!யாரோ ஒருவர்ராப்பகலாய் முயன்றஅரிய வகை மின்சாரத்தில்உலகமே இயங்குகிறது!யாரோ ஒருவர்செய்த சாதனை தான்சொகுசு வாகனங்களில்சுகமாய் பயணிக்கிறோம்!யாரோ ஒருவர் உருவாக்கியமின்சார மோட்டாரால்விளை நிலத்தில்பயிர்கள் செழித்து வளர்கின்றன!நீரில் மிதக்கும் கப்பல்கள்வானில் ஊர்ந்து செல்லும்விமானங்கள்...இன்னும் பல பல...சுயநலமின்றி வாழ்ந்து சென்றசாதனை மனிதர்களின்சிந்தையும், செயலுமேநாம் பெற்ற வரங்களாகும்!முகம் காணாத அவர்கள்இன்றும் நம்முடன்ஒன்றாய் கலந்துநிழலாய் தொடர்கின்றனர்!யாரோ ஒருவரென பலர்விட்டுச் சென்றபொக்கிஷங்களில் தான்சுழன்று கொண்டிருக்கிறோம்!எதிர் வரும் தலைமுறைக்குவிலை மதிப்பற்ற எதையேனும்விதைத்து விட்டு செல்வோம்...அந்த யாரோ ஒருவராக! — ஜி சுந்தரராஜன், திருத்தங்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !